Tuesday, September 23, 2008

வார்த்தைகள் !!!

"பிறருடைய வார்த்ததைகள் - உங்களது உற்சாகத்தை, உங்களுடைய முயற்சியை ஒருநாளும் குறைத்து விட முடியாது. நீங்கள் அனுமதித்தாலொழிய"....
***
"எண்ணங்களில் வாழப்பார்க்கிறோம்.வார்த்தைகளில் தான் வாழ்கிறோம்.செயலில் அல்ல."
****
"வாழ்க்கையின் எந்தத் துறையிலும், ஆன்மீகத்திலாகட்டும், பாலுறவிலாகட்டும் - வார்த்தைகளே நம்மைத் தூண்டுகின்றன."
------ (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
***
"எண்ணங்களில் கவனமாக இருங்கள் -அது வார்த்தைகளாக வெளிப்படுபவை.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள் -அது செயலாக வெளிப்படுபவை.
செயல்களில் கவனமாக இருங்கள் -அது பழக்கமாக மாறுபவை.
பழக்கங்களில் கவனமாக இருங்கள் -அது உங்கள் ஒழுக்கமாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள் -அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்."
***
"சொல்லுக்கும், செயலுக்கும் -
நெருங்கிய சம்பந்தம் இருக்க வேண்டும்."
***
"பிறரது உதாசீனம் பிறரது அவமானச் சொல் -சில சமயம் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும்."
***
"மிகக் கடினமான பெரிய வார்த்தைகளைக் கொண்டுஅழகான பிரசங்கம் செய்து வருபவன் உண்மையில்உங்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க விரும்புவதில்லை. அவன் தன் மேதாவித்தனத்தை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான்."
------ (ஓ.மில்லர்)
***
"கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும்,காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன."
----(மனோதத்துவம்)

Source: tamizachi.com

No comments: