Thursday, November 27, 2008
இன்றொரு நாள் !!!
இன்றொரு நாள் அதிகமாக உள்வாங்கிக்கொள்கிறேன்!
இந்த உலகில் நாம் பேசுவதை மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்பதைக் காட்டிலும் இன்பமான சங்கதி வேறு கிடையாது. ஆனால், பிறர் பேசுவதை நாம் காது கொடுத்துக் கேட்டிருக்கிறோமா? எதிராளி ஆரம்பித்த வாக்கியத்தை நாம் முடிப்பது, முழுதாக முடிக்கவிடாமல் நமது கருத்துக்களைத் திணிப்பது, சீரியஸாக மகள் கல்யாணத்தைப் பற்றிய கவலைகளை ஒருவர் பகிரும்போது, 'டீக்கடையில் மசால் வடை போட்டிருப்பானே' என்று நினைவுகளை அலைபாயவிடுவது போன்றவை இருவருக்கும் இடையேயான புரிந்துகொள்ளலை மிக மோசமாகப் பாதிக்கும். உங்கள் உடல் மொழியே நீங்கள் எதிராளிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரையும் உலகின் முக்கியமான நபராக எதிர்கொள்ளத் தொடங்குங்கள். இன்றொரு நாள் பேசுவதைக் குறைத்து அதிகமாகக் கவனியுங்களேன்!
இன்றொரு நாள் குட்டி விஷயத்துக்கும் குதூகலப்படுங்களேன்!
தெரிந்த முல்லா கதைதான். ஆனாலும், சுவாரஸ்யமானது. சந்தைக்குச் சென்ற முல்லா வழியில் ஒரு நண்பரைச் சந்தித்தார். இரவு சமையலுக்கு ஒரு வாத்து வாங்கி வந்த அவர், மிகவும் சோகமாகக் காணப்பட்டார். என்னவென்று விசாரித்த முல்லாவிடம், ''எப்போதும் ஏதாவது ஒரு சோகம் மனதை வாட்டிக் கொண்டே இருக்கிறது. மகிழ்ச்சியை எங்கே சென்று கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை!'' என்றார் நண்பர். சட்டென நண்பரின் கையிலிருந்த வாத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடத் தொடங்கினார் முல்லா. எதுவும் புரியாத நண்பர் வாத்தை மீட்பதற்காக நண்பரைத் துரத்தத் தொடங்கினார். அங்குமிங்கும் போக்குக்காட்டிய முல்லா, வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்து நண்பரிடம் மாட்டிக்கொண்டார். வாத்தை முல்லாவிடம் இருந்து பறித்துக்கொண்ட தும் நண்பர் முகத்தில் முழுத் திருப்திப் புன்னகை! ''கண்டுபிடித்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் முல்லா. புரியாமல், ''எதை?'' என்றார் நண்பர். ''நீங்கள் தேடிய சந்தோஷத்தை!'' என்றார் முல்லா புன்னகை யுடன். கதை புரிந்தவர்களுக்கு வாழ்க்கையும் எளிதில் புரிந்திருக்கும்.
உள்ளம் மகிழ, உற்சாகமாக, பொங்கல், தீபாவளி, திருமணம், பிறந்த நாள், அஜீத் படம், ப்ரமோஷன், நியூ இயர் என்று காத்திருப்பது நம்மவர்களுக்குப் பழகிவிட்டது. எதற்குக் காத்திருக்க வேண்டும்? மழை நேர டீ அத்தனை இதமூட்டியதே, வாசித்த சிறுகதை உற்சாகமூட்டியதே, எஃப்.எம். பாடல் திடீரென மனதை நெகிழ்த்தியதே, பஸ் ஜன்னல் காற்று முடி கலைக்கிறதே என்று ஒவ்வொரு கணத்துக்கும் சந்தோஷப்படலாமே!
இன்றொரு நாள், பல முறை தள்ளிப்போட்ட ஒரு விஷயத்தை முடிப்போமே!
'அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப்போட்ட விஷயங்களைப் பட்டியலிடுங்களேன். பேப்பர் போதாத அளவுக்குப் பட்டியல் நீள்கிறதா! சின்ன வயதில் நம்மிடம் சொல்லியிருப்பார்களே... 'மனதில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போன வர்களின் ஆன்மா சாந்தியடையாமல் இங்கேயே சுற்றிச் சுற்றி வரும்!' என்று. அது போலத்தான் நீங்கள் முடிக்காத காரியத்தின் சுமை உங்கள் மூளையில் அழுத்தமாகப் படிந்துகிடக்கும். நீங்கள் எதிர்பார்ப்ப தைக் காட்டிலும் அதன் அழுத்தம் அபாரமானது. அது உங்களுடைய எல்லா செயல்களிலும் எதிரொலிக்கும். இரவு உணவைத் தவிர, அன்றைய பணிகள் அனைத்தையும் மாலை 6 மணிக்குள் முடிக்கப் பழகுங்களேன். மனதில் எழும் திருப்தியான நிறைவை, 'ஃபீல் குட் ஃபேக்டர்' என்பார்கள். உங்கள் வாழ்க்கை ஃபீல் குட் லைஃப் ஆக இருக்கும்!
இன்றொரு நாள்தானே... உங்களால் முடியும்!
Friday, November 7, 2008
பொன்மொழி
Tuesday, September 23, 2008
வார்த்தைகள் !!!
***
"எண்ணங்களில் வாழப்பார்க்கிறோம்.வார்த்தைகளில் தான் வாழ்கிறோம்.செயலில் அல்ல."
****
"வாழ்க்கையின் எந்தத் துறையிலும், ஆன்மீகத்திலாகட்டும், பாலுறவிலாகட்டும் - வார்த்தைகளே நம்மைத் தூண்டுகின்றன."
------ (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
***
"எண்ணங்களில் கவனமாக இருங்கள் -அது வார்த்தைகளாக வெளிப்படுபவை.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள் -அது செயலாக வெளிப்படுபவை.
செயல்களில் கவனமாக இருங்கள் -அது பழக்கமாக மாறுபவை.
பழக்கங்களில் கவனமாக இருங்கள் -அது உங்கள் ஒழுக்கமாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள் -அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்."
***
"சொல்லுக்கும், செயலுக்கும் -
நெருங்கிய சம்பந்தம் இருக்க வேண்டும்."
***
"பிறரது உதாசீனம் பிறரது அவமானச் சொல் -சில சமயம் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும்."
***
"மிகக் கடினமான பெரிய வார்த்தைகளைக் கொண்டுஅழகான பிரசங்கம் செய்து வருபவன் உண்மையில்உங்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க விரும்புவதில்லை. அவன் தன் மேதாவித்தனத்தை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான்."
------ (ஓ.மில்லர்)
***
"கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும்,காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன."
----(மனோதத்துவம்)
Source: tamizachi.com
Monday, September 15, 2008
பொன்மொழிகள் !
--- சுவாமி விவேகானந்தர்
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள
முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக்
கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
--- வில்லியம் ஷேக்ஸ்பியர்
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
---அடால்ஃப் ஹிட்லர்
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
---ஆலன் ஸ்டிரைக்
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
---அன்னை தெரசாவெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
---பான்னி ப்ளேயர்
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
---லியோ டால்ஸ்டாய்
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.---அப்ரஹாம் லிங்கன்
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
---ஐன்ஸ்டைன்
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.
---சார்லஸ்
Monday, August 18, 2008
POSITIVE ALWAYS !!!
Friday, August 15, 2008
சிகரத்தைப் பிடிக்க சிரி!
- சராசரியாக நாள் ஒன்றுக்கு நம் மனதில் 60,000 எண்ணங்கள் கடந்து செல்கின்றன. முந்தைய நாளின் எண்ணங்கள் அதில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம். இந்தக் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வரப் பழகுங்கள். எல்லையில்லா எண்ணங்கள்தான் எதிர்காலத்துக்கான ஏணி. ஏக்கங்கள் எண்ணங்களாக மாறினால், ஏற்றம் நிச்சயம்!
- உங்கள் வாழ்க்கையின் தரம், நீங்கள் மற்றவர்களுடன் எவ்வாறு பேசிப் பழகுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். மற்றவர்களுடன் என்பதைக் காட்டிலும் உங்களுடன் நீங்கள் எப்படிப் பழகுகிறீர்கள் என்பதும் முக்கியம். வானத்திலிருந்து எந்த தேவதையும் இறங்கி வந்து உங்களுக்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வாரி வழங்காது. உங்கள் முனைப்பே உங்களை முன்னேற்றும். இது இயற்கையின் விதி!
- முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள், முடிவுகளில் அல்ல! எந்த ஒரு காரியத்தையும் விரும்பியோ, மற்றவருக்கு உதவும் பொருட்டோ, நல்ல பயிற்சியாகவோ செய்து பழகுங்கள். அதனால் கிடைக்கும் பணம், புகழில் கவனத்தைச் சிதைக்காதீர்கள். அவை தன்னால் பின்தொடரும்!
- தினமும் சிரிக்கப் பழகுங்கள். நாலு வயதுக் குழந்தை தினமும் சராசரியாக 500 முறை சிரிக்கிறது. ஆனால், வளர்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளத் துவங்கியவுடன் நாம் தினமும் 15 முறை சிரித்தாலே அதிகம். நம்பினால் நம்புங்கள், மனம்விட்டுச் சிரிப்பது ஹார்மோன்களைத் தூண்டிவிட்டு, உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது!
- சலனமற்று இருக்கப் பழகுங்கள். சராசரி மனிதன் ஒரு மாதத்தில் முப்பது நிமிடங்கள்கூட ஆழ்ந்த அமைதியில் கழிப்பதில்லை. ஒரு நாளில் பத்து நிமிடங்களாவது தனிமையின் அமைதியை, அதன் அதிர்வுகளை உணரப் பழகுங்கள். அது இதுவரை நீங்கள் உணர்ந்திராத உத்வேகத்தை அறியச் செய்யும்!
- உங்கள் லட்சியங்கள் குறித்து எதிர்மறையான எண்ணங்கள் மனதினுள் எழுந்தால், உடனடியாக பாஸிட்டிவ் எண்ணங்களால் உங்கள் சிந்தனைகளை ஆக்கிரமித்துக்கொள்ளுங்கள். அந்த எண்ணங்கள் கற்பனைகளின் உச்சமாகக்கூட இருக்கலாம். ஆனால், ஒருபோதும் நெகட்டிவ் சிந்தனைகளின் நிழல்கூட உங்களுக்குள் படியவிடாதீர்கள்!
- உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யாரும் நோகடிக்கவோ, காயப்படுத்தவோ முடியாது என்பதை உணருங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் எந்த ஓர் அனுபவத்தையும் உங்களுக்குச் சாதகமாக எவ்வாறு மாற்றிக் கொள்கிறீர்கள் என்பதில் அடங்கியிருக்கிறது உங்கள் வெற்றிக்கான சூட்சுமம். கசப்பான அனுபவங்கள் என்று உலகத்தில் எதுவுமே கிடையாது. அனுபவங்கள் மட்டுமே உண்டு!
- தன்மை என்றால் மலரைப் போல் மிருதுவாகவும், தடாலடி என்றால் இடியைப் போல் அதிரடியாகவும் இருக்கப் பழகுங்கள். 'சரிதான்' என்று ஊர்ஜிதமானால் உங்கள் கொள்கைகளை நிறைவேற்றத் தயங்காதீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்கான மரியாதையை இழந்துவிடாதீர்கள்!
- மன அழுத்தமும் தேவைதான்! மன உளைச்சலுடன் ஒரு செயலைச் செய்து முடிக்கும்போது, அதற்கென நமது மனமும் உடலும் சில தகுதிகளை வளர்த்துக்கொள்கிறது. ஆனால், தொடர்ச்சியான மன அழுத்தமோ, உளைச்சலோ ஆரோக்கியமானதல்ல. கடுமையான மன அழுத்தத்தைத் தொடர்ந்து, சராசரி ஓய்வைவிட அதிக ஓய்வெடுக்க வேண்டும்!
- 'கோபப்படுவது எவருக்கும் எளிது. ஆனால், தகுந்த காரணத்துக்காக, சரியான சமயத்தில், சரியான அளவில், சரியான முறையில், சரியான நபரிடம் கோபப்படுவது அனைவருக்கும் சாத்தியமல்ல. அது ஒரு தனிக் கலை!' என்கிறார் அரிஸ்டாட்டில்.நீங்கள் அறிந்தவர்களிலேயே மிக மிக நேர்மையான நபர் நீங்களாகத்தான் இருக்க வேண்டும்!
- மனதுக்கு அடிக்கடி சம்மர் வெகேஷன் கொடுங்கள். மிகுந்த அழுத்தத்தை உணர்ந்தால், உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தை உலா வாருங்கள். அதிகாலையில் கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக்கில் வாக்கிங், குளிப்பதற்கு குற்றாலம் அருவி, பிரேக்ஃபாஸ்ட்டுக்கு சில பல மதுரை மல்லிகைப் பூ இட்லிகள், உல்லாசமாக ஊட்டி ஏரியில் படகுச் சவாரி. பிசிபேளாபாத்தை ஒரு கை பார்த்துவிட்டு, மைசூர் அரண்மனையில் ஒரு ரவுண்டு, பனி போர்த்தும் மூணாறு மலை குளிருக்கு உதறியபடியே உறக்கம் என பர்ஸ் காலியாகமலேயே ஒரு ஜாலி ட்ரிப் அடியுங்கள். கம்ப்யூட்டரின் ரெஃப்ரெஷ் பட்டனாக, அந்தக் கற்பனை உங்களை உற்சாகப்படுத்தும்!
- சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருப்பவை எல்லாம் கடவுளின் வேதங்கள் அல்ல. அதில் உள்ளவற்றில் எவையெல்லாம் உங்களுக்குப் பொருந்தும் என்று நினைக்கிறீர்களோ, அவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். எப்படி ரெடிமேட் கடையில் இருக்கும் சட்டைகளில் எல்லாமே உங்களுக்குப் பொருந்தாதோ, அதுபோலத்தான் சுய முன்னேற்றக் கருத்துக்களும். இதை உங்களுக்கு வேறு யாரும் சொல்ல மாட்டார்கள். அறிஞ்சுக்கோ, தெரிஞ்சுக்கோ, புரிஞ்சுக்கோ!
Thursday, August 14, 2008
TIPS FOR BETTER LIFE
- Take a 10-30 minutes walk every day. And while you walk, smile.
- Sit in silence for at least 10 minutes each day.
- Sleep for 7 hours.
- Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.
- Play more games.
- Read more books than you did in past.
- Make time to practice meditation, yoga, and prayer. They provide us with daily fuel for our busy lives.
- Spend time with people over the age of 70 & under the age of 6.
- Dream more while you are awake.
- Eat more foods that grow on trees and plants and eat less food that is
manufactured in plants. - Drink plenty of water.
- Try to make at least three people smile each day.
- Don't waste your precious energy on gossip.
- Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past. That will ruin your present happiness.
- Don't have negative thoughts or things you cannot control. Instead invest your
energy in the positive present moment. - Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
- Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
- Smile and laugh more.
- Life is too short to waste time hating anyone. Don't hate others.
- Don't take yourself so seriously. No one else does.
- You don't have to win every argument. Agree to disagree.
- Make peace with your past so it won't spoil the present.
- Don't compare your life to others'. You have no idea what their journey is all
about. Don't compare your partner with others. - No one is in charge of your happiness except you.
- Forgive everyone for everything.
- What other people think of you is none of your business.
- However good or bad a situation is, it will change.
- Your job won't take care of you when you are sick. Your friends will.. Stay in
touch. - Get rid of anything that isn't useful, beautiful or joyful.
- Envy is a waste of time. You already have all you need.
- The best is yet to come.
- No matter how you feel, get up, dress up and show up.
- Do the right thing.
- Call your family often.
- Your inner most is always happy. So be happy.
- Each day give something good to others.
- Don't over do. Keep your limits.
-- Source: Unknown
Monday, August 11, 2008
வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை!
வெற்றி என்பதற்கு எது அளவுகோல்?
பத்து ரூபாய் சம்பாதிப்பவன் நூறு ரூபாய் ஈட்டிவிட்டால், அது அவனைப் பொறுத்தவரை வெற்றி. ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டு இருப்பவன் கண்ணோட்டத்தில் அது தோல்வி!
சமூக அளவுகோல்களால் அளந்து பார்க்கப்படும் வெற்றிக்கும் மனிதனின் அடிப்படையான புத்திசாலித்தனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.வாழ்க்கையை அமைதியாகவும் ஆனந்தமாகவும் உயிர்ப்புடனும் வைத்திருப்பதே உண்மையான வெற்றி. உங்களுடைய உள் சூழ்நிலையையும் வெளிச் சூழ்நிலையையும் நீங்கள் வெற்றிகரமாகக் கையாள்வதற்கு அடிப்படைப் புத்திசாலித்தனம் நிச்சயம் தேவை.
புத்திசாலித்தனம் என்பது இன்றைய கல்வி மூலம் பெறப்படும் அறிவாற்றலை அல்ல; பல தரப்புகளிலிருந்து சேகரிக்கப்படும் விஷய ஞானத்தையும் அல்ல!
புத்திசாலித்தனம் என்பது வாழ்க்கையைத் தோலுரித்து, அதன் அடிப்படை உண்மையை அறிந்துகொள்ளும் திறன். பக்குவத்துடனும் தெளிவுடனும் வாழ்க்கையை நடத்துவதற்கு இந்த புத்திசாலித்தனம் மிக மிக அவசியம்!
-- சத்குரு ஜக்கி வாசுதேவ்
கலாசாரம்!
கலாசாரம் என்பது என்ன? முந்தின தலைமுறை செய்த குழப்பங்கள் எல்லாம் இன்றைய கலாசாரம். நீங்கள் செய்யும் குழப்பங்கள் எல்லாம் அடுத்த தலைமுறையின் கலாசாரம்.
செருப்பாக இருந்தாலும், கிரீடமாக இருந்தாலும், அதை ஒரேவிதமான பொறுப்போடு கையாளும் கலாசாரத்தை உங்களுக்குள் கொண்டுவாருங்கள். எறும்பாக இருந்தாலும், யானையாக இருந்தாலும் ஒரே விதமான உள்ளுணர்வோடு அதை அணுகும் கலாசாரத்தை ஆராதியுங்கள். அவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன், அவன் நல்லவன், இவன் கெட்டவன் என்ற பாகுபாடு பார்க்காத கலாசாரத்தைப் பேணுங்கள். தினப்படி செய்யும் சிறு வேலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, முழு ஈடுபாட்டுடன் செயல்படும் கலாசாரத்தைத் தழுவுங்கள். புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்துங்கள்.
மற்றபடி, வேறு எந்தக் கலாசாரத்தையும் நீங்கள் பின்பற்ற வேண்டியதில்லை.
எதுவானாலும் முக்கியம், அல்லது எதுவுமே முக்கியமில்லை என்ற இரண்டு வித நிலைப்பாடுகளும் ஆன்மிகமானவை. இப்படி வாழ முடிந்தால், அதுவே சிறப்பான கலாசாரம். இந்தக் கலாசாரத்தை உங்கள் குழந்தைகளுக்கும் அமுதமாய்க் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். அப்புறம், அவர்கள் கிழக்கே வாழ்ந்தாலும் மேற்கே வாழ்ந்தாலும், ஒரு பிரச்னையும் இல்லை!
-- சத்குரு ஜக்கி வாசுதேவ்
Sunday, August 10, 2008
அதிகாரம் செய்!, அதிகாரத்துக்குக் கட்டுப்படு!
'அதிகாரம் செய்!', 'அதிகாரத்துக்குக் கட்டுப்படு!' - இந்த இரண்டே கட்டளைகளில் அடங்கியிருக்கிறது இன்றைய உலகம்.
- வார்த்தைகளால் எதிராளிகளைக் கவர வேண்டுமென்றால், அவற்றை மிகக் குறைவாகப் பயன்படுத்துங்கள். அதிக வார்த்தைகள் உங்களை மற்றவர்களிடையே சகஜமாக்கும். குறைவான வார்த்தைகள், உங்களை அதிகாரத்தில்வைக்கும். நீங்கள் கூறும் நாலு தெளி வான வரிகளைவிட ஒரே மையமான வரி உங்கள் ஆளுமையை அதிகரிக்கும்!
- உங்கள் நடவடிக்கைகள்தான் வெற்றியை ஈர்க்க வேண்டும், வாதத் திறமை அல்ல. செயல்படுங்கள்... வார்த்தைகளைச் செல வழிக்காதீர்கள்!
- மற்றவர்களுக்கு உங்கள் இருப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக வேண்டும். உங்களை எந்தளவுக்கு எதிர்பார்க்கிறார்களோ, அந்த அளவுக்கு உங்களை நீங்கள் சுதந்திரமாக்கிக்கொள்ள முடியும்!
- யாருக்கு எதிராகச் செயல்படுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒரே மாதிரி ரியாக்ட் செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். பகைவரைத் திகைக்கவைக்கவும், ஒதுங்கி இருப்பவரை ஒதுக்கவும் தெரிந்திருக்க வேண்டும்!
- நீங்கள் பலவீனமாக இருந்தால், யோசிக்காமல் எதிராளியிடம் சரணடைந்துவிடுங்கள். உங்களோடு போட்டியிட்டு வென்ற திருப்தியை எதிரிக்கு அளிக்காதீர்கள். சரணடைந்த காலம் உங்கள் தன்னம்பிக்கையை, தைரியத்தை, திறமையை மீட்டெடுக்கும். பலவீனத்தையும் பலமாக மாற்றும் சூட்சுமம் இது!
- ஒரு திட்டத்தில் உங்களுக்குத் தயக்கமோ, மாற்றுக்கருத்தோ இருந்தால், அதில் இறங்காதீர்கள். அந்தத் தயக்க மயக்கம் உங்கள் நடவடிக்கைகளில் பிரதிபலிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். அதே சமயம் 'சொல்லி அடிப்பேன்' என்ற நம்பிக்கை இருந்தால் அதிரடியாக இறங்கி அடித்துத் தூள் கிளப்புங்கள்!
- வெற்றிக் கோட்டைத் தாண்டினால்தான் வெற்றி. அது வரை ஓட்டத்தை நிறுத்தக் கூடாது. துரத்தி வருபவனோடு இடைவெளி அதிகமிருந்தாலும் டாப் கியர் தடாலடிதான் உங்களை 'டாப்'பில் வைக்கும்!
- அசரவைக்கும் அபார சாதனைகளுக்கான நடவடிக்கைகள்கூட சகஜமாக, சாதாரணமாக இருக்க வேண்டும். எதையும் ஜஸ்ட் லைக் தட் சாதிக்கும் இயல்பு, உங்களை இன்னமும் 'சரக்கு' உள்ளவராகக் காட்டும்!
- வெற்றிக்காகப் போராடுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்தளவு முக்கியம், வெற்றியை ரசித்து ருசிப்பதும்!









